Friday, October 25, 2013

ஒரு கவிதை அல்லது கவிதை போல ஒன்று.

உனக்கு உன் குஞ்சு பொன் குஞ்சா
என்று காகத்திடம் கேட்டேன்.
தெரியவில்லை - ஆனால்
அவர்களுக்காக இரைத் தேடப் போகிறேன்,
பழமொழி பேசும் ஆடம்பரமெல்லாம்
மனிதர்களுக்கு வாய்த்தது - எனக்கூறிப் பறந்தது.