Sunday, October 23, 2016

உயிர்மை - விநாயக முருகன்

குளிர் இரவு, மெல்லிய ஒலியில் கணினியிலிருந்து கசியும் பாடல்களும், ஜன்னலுக்கு வெளியே அசைவின்றி உறங்கும் ஸ்லீப்பி வில்லோ மரமும், படித்துக்கொண்டிருக்கும் உயிர்மை புத்தகமும், இவ்விரவையும் இத்தனிமையையும் இனிதாக்குகிறது.


ஆகஸ்ட் உயிர்மை இதழில் வெளிவந்த "சமூக ஊடக உறவுகளும் நீர்க்கோலப் புரட்சியும்", என்கிற விநாயக முருகனின் கட்டுரை ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறது, சோசியல் மீடியாவின் மனநிலைப்போக்கைப் பற்றி அலசுகிறது. நீண்ட நேரம் யோசிக்க வைக்கக் கூடிய கட்டுரை. முன்பு சுஜாதா எழுதிய கட்டுரைகளை இவருடைய கட்டுரைகளுடன் ஒப்பிடலாம். சுஜாதா அவர் கதைகளில் அறிவியலை அவர் கதைகளின் சுவையை கூட்டுவதற்காக சேர்ப்பார், இவர் சற்றே மென்பொருள் அறிவியலின் உள்ளெ சென்று கொஞ்சம் தீவிரமாக ஆராய்கிறார். புதிதாய் டேட்டா மைனிங், டேட்டா சயின்ஸ் போன்றத் துறைகளுக்கு நுழையும் இளைஞர், இளைஞிகளுக்கு இக்கட்டுரை ஒரு நல்ல அறிமுகம். தயவு செய்து சுந்தர் பிச்சையின் தொப்பியை அணிந்துக்கொண்டு குற்றம் கண்டுபிடிக்க கிளம்பினீர்களெனில் கட்டுரையின் மையக்கருத்தை தவற விட்டு விடுவீர்கள். இவர் அதற்க்கு முந்தைய இதழில் எழுதிய "பிராய்லர் பண்ணைகளும் திறமை இல்லா திண்டாட்டமும்" கூட தமிழின் முக்கியமான கட்டுரையே.