Saturday, July 8, 2023
கோரக்பூர் கதைகள் – 7:
Thursday, July 6, 2023
கோரக்பூர் கதைகள் – 6:
“I love you because the entire universe conspired to help me find you” - The Alchemist
Tuesday, July 4, 2023
கோரக்பூர் கதைகள் – 5
உள்ளூர் கல்லூரியில் படித்த ஒரு சிலர் நல்ல நண்பர்களானார்கள். அவர்களின் நட்பால் கொஞ்சம் வெளியே போய் சுற்றிவிட்டு நேரம் தாழ்த்தி வருவது போன்ற சிறு அத்துமீறல்கள் வாடிக்கையாகி இருந்தது. ஒருநாள் ஒரு நட்சத்திர விடுதிக்கு, எங்களையும் மற்றும் இன்னும் இரண்டு, மூன்று மாநிலத்தவர்களையும் கலை நிகழ்ச்சிகளுக்காக அழைத்துச் சென்றனர், நாங்களும் நாடகங்கள் நடித்து விட்டு வந்தோம். அது அடுத்த நாள் அங்கே ஒரு உள்ளூர் செய்தித்தாளில் வந்தது, அது ஒரு சிறு சலசலப்பை உண்டு பண்ணியது. உள்ளூர் அரசியல்வாதிகளுக்காக பிற மாநிலத்தவர்களை கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்து கலை நிகழ்ச்சி நடத்தினார் என ஒருங்கிணைப்பாளருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். தேவேந்திர சிங் உள்ளூர்காரன், அவன் இதைப் பற்றி எங்களுக்கு விளக்கினான். உள்ளூர் அரசியல், எங்கள் புகைப்படத்தைப் போட்டு எங்கள் தலையை உருட்டிருந்தனர். எங்கள் மேய்ப்பரிடம் என்ன செய்வது என்று கேட்டோம், அவரோ பிராத்மிக்கிடம் அந்த செய்திதாளில் வந்த செய்தியை தமிழில் மொழிபெயர்த்து எழுதி தருமாறு கேட்டுக்கொண்டிருந்தார். எங்களை உற்சாகப்படுத்துவதற்காக தேவேந்தர் அவன் வீட்டிற்கு என்னையும் இன்னொரு தமிழ் நண்பனையும் மேலும் 2 சேட்டன்களையும் விருந்துக்கு அழைத்தான். அவனுக்கு நாங்கள் ஆங்கிலத்தில், அதிகமில்லை 15-20 வாக்கியங்களை எப்படி சரியாக அமைப்பது என்று கற்றுக் கொடுத்திருந்தோம். அவன் குடும்பத்தில் எல்லோரும் வாட்டசாட்டமான ஆண்கள், இராணுவத்தில் பணி புரிபவர்கள். ஜம்முவிலிருந்து ஒரு பெண், பெயர் நீரு, ஒரு நீதிபதியின் மகள் அவள், பேரழகி, அவள் மீது மய்யல் கொண்டிருந்தான், அவளைப்பற்றி தினம் எங்களிடம் பேசுவான், ஆனால் அவளிடம் அவன் பேசி நான் பார்த்ததில்லை. அவனுடன் நிறைய வருடங்கள் நட்பிலிருந்தேன். சில வருடங்களில் அவனும் இராணுவத்தில் சேர்ந்தான். திருமண பத்திரிக்கை அனுப்பி இருந்தான், பெண் பெயரைப் பார்த்தேன், நீரு அல்ல, வீட்டில் பார்த்த பெண், திருமணத்திற்கு பின், அவன் தஞ்சைக்கு வந்து கோவில்கள் எல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னான், பிறகு அது கைகூடவில்லை. நான் அமெரிக்கா வந்த பிறகு கூட நட்பிலிருந்தோம். ஒருமுறை தொலைபேசியபோது, அமெரிக்க வாழ்வைப் பற்றியெல்லாம் விசாரித்து விட்டு, என்னிடம், அமெரிக்க மக்கள் இந்திய இராணுவத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டான், நானும் யோசித்துப்பார்த்தேன், அது வரை கூட பணி புரிந்த எவரும் என்னிடம் இராணுவத்தைப் பற்றியெல்லாம் பேசியது இல்லை, அவர்கள் என்னிடம் அதிக பட்சமாக பேசுவது, இந்திய உணவுகள் பற்றியும், கோயில்கள் பற்றியும் தான், சொன்னேன், அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. எந்நிலையிலிருந்தாலும் எல்லோருக்கும் ஒரு அங்கீகாரம் தேவையாயிருக்கிறது. மெதுவாய் எங்கள் நட்பு நீர்த்துப்போனது.







